முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
இலங்கைசெய்திகள்

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

Share

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு – மூன்று வாரங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்கவை. சீனாவின் வுகான் மாநிலத்தை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் இங்கு தொற்றுப் பரவுகின்றது.

இவ்வாறான நேரத்தில் நாங்கள் 5 விநாடிகளுக்கு முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் நம்மிடையே உணவு இன்றி இறப்பதா? ஒட்சிசன் இன்றி இறப்பதா? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால், உணவு இல்லாவிட்டால் இருப்பவர்கள் எமக்கு வழங்குவர். ஒட்சிசன் இல்லாவிட்டால் எம்மால் வாழவே முடியாது போகும். இதனால் இது தொடர்பில் தீர்மானங்களை அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...