vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

Share

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்றைய தினம், ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக இந்த வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது.அத்துடன், 2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்று நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...