thuruki
செய்திகள்உலகம்

இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு – துருக்கி அரசு

Share

இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

துருக்கி நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென துருக்கி அரசு தெரிவித்த நிலையில், இந்திய, நேபாள பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் துருக்கி அரசு வெளியிட்ட விசேட செய்தியில்,

“இந்தியா, நேபாளத்திலிருந்து துருக்கிக்கு வரும் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் இன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மேலும் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழையும் பயணிகள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தனிமைப்படுத்தலின் 10வது நாளில் பிசிஆர் பரிசோதனை சோதனை செய்யப்படும்.

அத்தோடு 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் பயணத்திற்கு முன்பு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

துருக்கி வந்த பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்பு பெற்றோருடன் அனுமதிக்கப்படுவர்.

மேலும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை அல்லது தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை எனவும் துருக்கி அரசு அறிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...