01 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் மீண்டும் QR முறை: இன்று முதல் அமுல்!

Share

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் இன்று (மார்ச் 15) காலை 6:00 மணி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பைக் கவனமாக நிர்வகிப்பதற்கும், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்படுவதைத் தடுத்து, பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இனிவரும் நாட்களில் QR குறியீடு இன்றி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமை அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றங்கள் இல்லாதிருப்பின், fuelpass.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் QR குறியீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். புதிய வாகனங்கள் அல்லது தகவல்களைப் புதுப்பிக்க வேண்டியவர்கள் அதே இணையதளம் வாயிலாகப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு (Weekly Quota) பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • மோட்டார் கார்கள்: 15 லிட்டர்

  • மோட்டார் சைக்கிள்கள்: 5 லிட்டர்

  • வேன்கள்: 40 லிட்டர்

  • முச்சக்கர வண்டிகள்: 15 லிட்டர்

  • பேருந்துகள்: 60 லிட்டர்

  • லாரிகள்: 200 லிட்டர்

  • விசேட வாகனங்கள்: 40 லிட்டர்

உற்பத்தித் துறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான விநியோகத்தைப் பாதிக்காத வகையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) ஊடாக விநியோகிக்கப்படும். மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும், முறையான நிர்வாகத்தின் மூலம் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும் என்றும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...