1770292452 lawyer 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சட்டத்தரணியின் லஞ்ச் பாக்ஸ் முதல் சொகுசு கார் வரை அம்பலமான உண்மைகள்!

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன தொடர்பான விசாரணையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக CID இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட 2.5 கோடி ரூபா பெறுமதியான ஹோண்டா வெசல் (Honda Vezel) கார், வில்பிரட் திசாநாயக்க என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், அந்தப் பணத்தை சட்டத்தரணியே வழங்கியுள்ளார் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தப்பணம் எவ்வாறு திரட்டப்பட்டது என்பது குறித்து CID வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறது.

கொலையைச் செய்த துப்பாக்கிதாரிக்கு, சட்டத்தரணிகள் என்ற போர்வையில் தப்பிச் செல்ல அவர் சட்டத்தரணிகள் அணியும் 2 கழுத்துப் பட்டிகள் (Bands),சட்டத்தரணிகளின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிகாரபூர்வ இலச்சினை (Sticker), துப்பாக்கிதாரிக்குத் தேவையான போலி சட்டத்தரணி அடையாள அட்டைக்கான புகைப்படங்கள் வழங்கியுள்ளார்:

சந்தேகத்தை தவிர்க்க தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை ஆகிய சட்டப் புத்தகங்கள்.சந்தேகநபர் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு மிகத் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

 

 

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...