NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுடனான தொடர்பு மற்றும் ஏனைய சில நிதி விவகாரங்கள் குறித்த விசாரணைகளுக்காக அவர் ஏற்கனவே சிஐடி-யினால் அழைக்கப்பட்டிருந்தார்.

முந்தைய அழைப்பாணையின்போது அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனையடுத்தே அவரது கோரிக்கைக்கு அமைய, இன்று (03) செவ்வாய்க்கிழமை புதிய திகதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அவரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணை முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 112
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உடலுக்குள் கொக்கைன் கடத்திய உகாண்டா பெண்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது உடலுக்குள் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி...

world 110
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் கால சந்தைச் சோதனைகள் தீவிரம்: அதிக விலைக்கு விற்றால் 1977 என்ற எண்ணிற்கு அழையுங்கள்!

சித்திரை புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, நுகர்வோரைச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் நாடு...

world 109
செய்திகள்இலங்கை

புத்தாண்டு பயணம்: 1,500 கூடுதல் பேருந்துகள் மற்றும் விசேட இரயில் சேவைகள் தீவிரம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக, விசேட...

world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...