NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுடனான தொடர்பு மற்றும் ஏனைய சில நிதி விவகாரங்கள் குறித்த விசாரணைகளுக்காக அவர் ஏற்கனவே சிஐடி-யினால் அழைக்கப்பட்டிருந்தார்.

முந்தைய அழைப்பாணையின்போது அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனையடுத்தே அவரது கோரிக்கைக்கு அமைய, இன்று (03) செவ்வாய்க்கிழமை புதிய திகதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அவரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணை முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...

நிஸ்ஸங்க சேனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி!

இன்றைய தினம், எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...