1531458896 indian sri lankan 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்கவில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்: அக்குரணை தொழிலதிபர் கைது!

Share

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த தொழிலதிபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அக்குரணைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது பயணப் பொதிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48,900 யூரோ (EUR), 14,000 அமெரிக்க டொலர் (US$), 26,650 இந்திய ரூபாய் (INR) நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன:

கைப்பற்றப்பட்ட மொத்த நாணயங்களின் இலங்கை ரூபா பெறுமதி சுமார் 24.09 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து இவ்வளவு பெரிய தொகையிலான நாணயங்களை அவர் கொண்டு வந்ததற்கான நோக்கம் குறித்துக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...