96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

Share

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அங்கிருந்து தனது முதல் பகிரங்க உரையை நிகழ்த்தியுள்ளார்.

டெல்லியில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தில் (FPC) ஒலிபரப்பப்பட்ட விசேட குரல் பதிவுச் செய்தி மூலம் அவர் ஆற்றிய உரையில், தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். யூனுஸின் நிர்வாகத்தை “சட்டவிரோதமானது மற்றும் வன்முறையானது” என்று அவர் வர்ணித்துள்ளார்.

தனது உரையில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் கோரிக்கைகளை முன்வைத்தார். தற்போதைய சட்டவிரோத நிர்வாகம் அகற்றப்பட்டு, மீண்டும் ஜனநாயக முறைப்படியான ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்.

பங்களாதேஷ் தெருக்களில் அரங்கேறும் வன்முறைகள் மற்றும் சட்டமின்மை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு செயற்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள் மற்றும் அவாமி லீக் உறுப்பினர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

கடந்த கால வன்முறை நிகழ்வுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (UN) ஒரு நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.

இந்திய மண்ணிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்துள்ள இந்த அறிக்கை, பங்களாதேஷின் தற்போதைய இடைக்கால அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...