Douglas Devananda
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை: துப்பாக்கி விவகார வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Share

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கம்பஹா நீதிமன்றம் இன்று (09) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

அந்தத் துப்பாக்கி, கடந்த 2001-ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, வழக்கை ஆராய்ந்த நீதிபதி அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். எனினும், வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...