Arrested
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுமி வன்புணர்வு!! – பருத்தித்துறை இளைஞர்கள் கைது

Share

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியிடம் (வயது – 15) பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

சட்ட மருத்துவ வல்லுநரின் மருத்துவ அறிக்கைக்காக பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கைதான இளைஞர்கள் 19 மற்றும் 24 வயதுடையவர்கள். இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...