per xijinping 01 810459054
செய்திகள்உலகம்

மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் !!

Share

மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் பதவி வகிப்பார் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சீனவின் அதிபா் ஷி ஜின்பிங் மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராக பதவியில் தொடர வழிசெய்யும் தீா்மானத்துக்கு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங் மற்றும் அவருக்குப் பிறகு அதிபாரன டெங் ஜியோபிங் ஆகியோர் மூன்று முறை அதிபராக இருந்துள்ளார்கள்.

அதன் பின் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அக் கட்சியின் மத்திய குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்மூலம், ஷி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீன அதிபராக தொடருவது உறுதியாகியுள்ளது.

சீன அதிபராக ஷி ஜின்பிங் 2012-இல் பதவியேற்றாா்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங்குக்கு பின், சீனாவின் வலிமையான அதிபராக ஜின்பிங் கருதப்படுகிறாா்.

இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. எனினும் இப்போதுள்ள சா்வதேச சூழ்நிலையில், ஜின்பிங்கே அதிபராக இருப்பது நாட்டுக்கு நல்லது என , சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சீனாவில் அதிபர் ஒருவா் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை , கடந்த 2018-ஆம் ஆண்டு கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஷி ஜின்பிங் மாற்றியமைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1760409734 2952
செய்திகள்உலகம்

வர்த்தகப் போர் தணிவு: அமெரிக்கப் பொருட்களுக்கான 24% வரியை ஓராண்டுக்குத் தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத...

227670
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் விவாகரத்து அதிகரிப்பு: ‘4 லட்சம் தம்பதிகள் பிரிந்தனர்; சமூக ஊடக அடிமைத்தனம் ஆபத்து’ – அமைச்சர் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமண...

aONVWpw1
செய்திகள்உலகம்

பயங்கரவாதத்தை தூண்டியதாகக் குற்றச்சாட்டு: சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் பங்களாதேஷ் நுழையத் தற்காலிகத் தடை!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர்...

23 645227426bdff
செய்திகள்அரசியல்இலங்கை

13வது திருத்தம் விவாதத்தை நிறுத்துங்கள்: சுயநிர்ணய உரிமைக்கு ஐ.நா. தீர்மானம் 1514-ன் கீழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு!

இலங்கையின் காலனித்துவக் கட்டமைப்புக்குள் தமிழர்களைச் சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள்...