image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

Share

 

நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம் சீர்குலைந்து நாடு பாரதூரமான அராஜக நிலையை நோக்கிச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் கடந்த ஒரு வருடமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரே கடமையாற்றி வந்தார். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் முடங்கியுள்ளது.

அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த தர்மப்பிரிய கம்மன்பிலவின் பெயரைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார். மாறாக, தகுதி குறைந்தவர்களின் பெயர்களை ஜனாதிபதி அனுப்பி வைத்ததால் அரசியலமைப்பு பேரவை அவற்றை நிராகரித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், பொதுக் கணக்குக் குழு (COPA) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) ஆகியவற்றின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

முறையான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை மற்றும் அதனால் ஏற்படும் நிதிச் சீர்கேடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

 

Share
தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....