கண்டி மாவட்டத்தின் உடுதும்பர – தேவஹந்திய பகுதியில் இன்று (08) மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று மாலை 5.05 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடியூட் (Magnitude) ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது பாரிய சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நில அதிர்வு தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. இது ஒரு சிறிய அளவிலான நில அதிர்வு என்பதால், சுனாமி அல்லது மேலதிக அனர்த்த அபாயங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.