MediaFile 6
அரசியல்இலங்கைசெய்திகள்

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: நாகரிகமற்ற செயல் என JVP கடும் கண்டனம்!

Share

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று (04) உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்ற அமெரிக்காவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வெனிசுலாவின் எதிர்காலத்தையும், அதனை யார் ஆள வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உண்டு. அந்த உரிமையைப் பறிக்க எந்தவொரு சர்வதேச சக்திக்கும் அதிகாரம் இல்லை.

நவீன நாகரிக உலகில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசுகளின் சுதந்திரம் ஆகியவை உலகளாவிய கொள்கைகளாகும். எவ்விதக் காரணமுமின்றி ஒரு நாட்டின் மீது இராணுவப் படையெடுப்பை நடத்துவது காட்டுமிராண்டித்தனமானது என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த வலுக்கட்டாய இராணுவத் தலையீட்டை உலகில் எந்தவொரு ஜனநாயக நாடும் அங்கீகரிக்காது என நம்புவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

“நாங்கள் வெனிசுலாவின் சுதந்திரத்திற்காகவும் அதன் இறையாண்மைக்காகவும் உலக அரங்கில் உறுதியாக நிற்போம். இந்த அநீதியான இராணுவப் படையெடுப்பிற்கு எதிராக எமது கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.”

இலங்கையின் ஆளுங்கட்சிக் கூட்டணியில் பிரதான அங்கம் வகிக்கும் ஜே.வி.பி, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராகத் தனது முதலாவது சர்வதேச கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...