MediaFile 6
அரசியல்இலங்கைசெய்திகள்

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: நாகரிகமற்ற செயல் என JVP கடும் கண்டனம்!

Share

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன்று (04) உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்ற அமெரிக்காவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வெனிசுலாவின் எதிர்காலத்தையும், அதனை யார் ஆள வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உண்டு. அந்த உரிமையைப் பறிக்க எந்தவொரு சர்வதேச சக்திக்கும் அதிகாரம் இல்லை.

நவீன நாகரிக உலகில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசுகளின் சுதந்திரம் ஆகியவை உலகளாவிய கொள்கைகளாகும். எவ்விதக் காரணமுமின்றி ஒரு நாட்டின் மீது இராணுவப் படையெடுப்பை நடத்துவது காட்டுமிராண்டித்தனமானது என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த வலுக்கட்டாய இராணுவத் தலையீட்டை உலகில் எந்தவொரு ஜனநாயக நாடும் அங்கீகரிக்காது என நம்புவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

“நாங்கள் வெனிசுலாவின் சுதந்திரத்திற்காகவும் அதன் இறையாண்மைக்காகவும் உலக அரங்கில் உறுதியாக நிற்போம். இந்த அநீதியான இராணுவப் படையெடுப்பிற்கு எதிராக எமது கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.”

இலங்கையின் ஆளுங்கட்சிக் கூட்டணியில் பிரதான அங்கம் வகிக்கும் ஜே.வி.பி, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராகத் தனது முதலாவது சர்வதேச கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...