MediaFile 2 1
செய்திகள்இந்தியாஇலங்கை

காரைநகரில் 11 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அதிரடி!

Share

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (ஜனவரி 02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

மீனவர்களுடன் சேர்த்து IND/PY/PK/MM/979 என்ற இலக்கத்தைக் கொண்ட ஒரு விசைப்படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை: கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும், அவர்களின் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய தரவுகளின்படி இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகப் பறிமுதல் செய்யப்பட்ட 253 மீன்பிடிப் படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ளன.

இந்தத் தொடர் கைதுகள் மற்றும் படகுகள் முடக்கம் காரணமாகத் தமிழக மீனவக் கிராமங்களில் கவலையும், மத்திய – மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...