MediaFile 2 1
செய்திகள்இந்தியாஇலங்கை

காரைநகரில் 11 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அதிரடி!

Share

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (ஜனவரி 02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

மீனவர்களுடன் சேர்த்து IND/PY/PK/MM/979 என்ற இலக்கத்தைக் கொண்ட ஒரு விசைப்படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை: கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும், அவர்களின் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய தரவுகளின்படி இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகப் பறிமுதல் செய்யப்பட்ட 253 மீன்பிடிப் படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ளன.

இந்தத் தொடர் கைதுகள் மற்றும் படகுகள் முடக்கம் காரணமாகத் தமிழக மீனவக் கிராமங்களில் கவலையும், மத்திய – மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...