image 61264ccd5d
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் ஆணையை அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது – சஜித் பிரேமதாச காட்டம்!

Share

மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது கட்டணங்களை அதிகரித்து மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில், தேர்தல் மேடைகளில் மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என முழங்கியவர்கள், இன்று 11.57% ஆல் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

9,000 ரூபா கட்டணத்தை 6,000 ரூபாவாகக் குறைப்பார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தற்போது ஏழ்மையான வாழ்க்கையையே அரசாங்கம் பரிசாக அளித்து வருகிறது. ஐ.எம்.எப் நிபந்தனைகளை மக்களுக்குச் சாதகமாக மாற்றுவோம் என்று கூறிவிட்டு, தற்போது அந்த நிபந்தனைகளை அப்படியே அமுல்படுத்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மின்சார நுகர்வோருக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, அவர்களை உதவியற்ற நிலைக்குத் தள்ளியதன் மூலம் அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ சூறாவளியினால் இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வேளையில், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக மின்கட்டணத்தை உயர்த்த முயல்வது மக்கள் விரோதச் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர்த்து, மேடைகளில் வாக்குறுதி அளித்தபடி 33 சதவீதத்தால் கட்டணங்களைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....