New Project 1 606896 552280
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 3 நாட்கள் தடுத்து வைக்க CID-யினருக்கு அனுமதி!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரணை செய்யக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், அவர் நேற்று (26) கைது செய்யப்பட்டார்.

இன்று (27) சந்தேகநபர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியத்தைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெளிவுபடுத்தினர்.

புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் 3 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்கப் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்.

குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது அல்லது யாருக்காவது வழங்கப்பட்டதா என்பது தொடர்பான கோணங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...