images 5 7
செய்திகள்இலங்கை

விசா நீடிப்பு ஒரு கசப்பான அனுபவம்: இலங்கை குடிவரவு திணைக்களத்தின் குளறுபடிகளைச் சாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

Share

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசா நீடிப்பைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வெளிநாட்டு குடும்பத்தினர், அங்கு நிலவும் முறையற்ற நடைமுறைகள் குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு: குறித்த குடும்பத்தினர் முதலில் இணையதளம் (Online) ஊடாக விசா நீட்டிப்புச் செய்ய முயன்றபோது, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்திற்கு நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அங்கு முறையான வழிகாட்டல் இல்லாமை, அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட காத்திருப்பு ஆகியவற்றால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது கசப்பான அனுபவங்கள் குறித்து அவர்கள் ‘டிக்டொக்’ (TikTok) தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “விசா கிடைத்த போதிலும், ஒரு சிறிய கால நீடிப்பிற்காக இவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டது வீணான முயற்சி” என அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தாண்டி இலங்கையில் தங்கியிருக்கும் மீதமுள்ள விடுமுறைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் அந்தக் காணொளியில் மேலும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் சுற்றுலாத்துறை நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...