images 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவப் பதவிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை (21) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை 09:00 மணியளவில் விகாரைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு, ‘வட இலங்கை துணை தலைமைச் சங்கநாயக’ பதவி வழங்கும் விழா நாளை நடைபெறவுள்ளது. புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கௌரவிப்பு நிகழ்வுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (18) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) முழுமையான ஆதரவுடன் ஒரு முக்கிய பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தையிட்டி விகாரைக்கு முன்பாக “இது ஒரு சட்டவிரோதமான விகாரை” எனத் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தல் பலகை நாட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விகாரை விவகாரம் தொடர்பாகத் தையிட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...