Namal Rajapksha SLPP Presidential Candidate
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான ‘கிரிஷ் ஒப்பந்த’ வழக்கு: பெப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Share

கிரிஷ் (Krish) நிறுவன ஒப்பந்தம் தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 16-ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட்’ வழங்கிய 70 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்‌ஷ மீது சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்தருகோடா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நியாயமான விசாரணையை உறுதிப்படுத்தும் நோக்கில், முந்தைய விசாரணைகளின் போது கோரப்பட்ட பல முக்கிய ஆவணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்று பிரதிவாதி தரப்பிடம் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...