115171512 110522371 gettyimages 903375720 1
இந்தியாசெய்திகள்

இரத்த மாற்று சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி!

Share

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சாட்னா (Satna) மாவட்ட மருத்துவமனையில் தலசீமியா நோய்க்காக இரத்த மாற்று சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீமோகுளோபின் உற்பத்தியைப் பாதிக்கும் தலசீமியா (Thalassemia) நோயால் பாதிக்கப்பட்ட 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள்.

மாவட்ட மருத்துவமனையில் இக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இரத்த மாற்று சிகிச்சையின் (Blood Transfusion) ஊடாக இந்தத் தொற்று பரவியுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பே இந்தத் தொற்று கண்டறியப்பட்ட போதிலும், தற்போதுதான் இந்த விபரம் பொதுவெளிக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் குமார் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மருத்துவமனைப் பணியாளர்களின் பாரதூரமான கவனக்குறைவு காரணமாகவே இக்குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையான சிகிச்சைகளை வழங்கவும், இந்த தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...