vagi 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வார இறுதியில் நுவரெலியா – யாழ்ப்பாண மரக்கறி விலைகள்: போஞ்சி கிலோ ரூ. 800!

Share

வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நுவரெலிய மற்றும் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையங்களின் விலைப்பட்டியல்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தன.

அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோவா, நுவரெலியாவில் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோகிராம் போஞ்சி, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு கிலோகிராம் கரட், யாழ்ப்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோகிராம் தக்காளி யாழ்ப்பாணத்தில் 450 ரூபாய்க்கும், நுவரெலியாவில் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் லீக்ஸ், யாழ்ப்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 20 சதவீத மரக்கறிகள் மாத்திரமே அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நகர்ப்புறங்களிலுள்ள தனியார் வர்த்தக நிலையங்களில் அதிகரித்த விலையிலேயே மரக்கறி விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...