articles2Fy4vlsuAHR6AX2UIg2KXs
செய்திகள்இலங்கை

360 மில்லியனுக்கு 3 மில்லியன் விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

Share

மனிதப் பயன்பாட்டிற்காக ரூபாய் 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5 ml/1 ml) கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தடுப்பூசிகள் இலங்கையில் ரேபிஸ் (Rabies) நோயைத் தடுப்பதற்கும், இந்நோய்க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

கொள்முதல் செயல்முறைக்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டதில், 6 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு (High-Level Standing Procurement Committee) மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் (Procurement Appeal Board) விதந்துரைக்கமைய, குறைந்த விலைமனுதாரரான Citihealth Imports (Pvt) Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசிகளின் உற்பத்தியாளர் Serum Institute of India Pvt Ltd, இந்தியா ஆகும். இந்த ஒப்பந்தம் ரூ. 360 மில்லியன் தொகைக்கு (பெறுமதிசேர் வரியில்லாமல்) வழங்குவதற்குச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர்...

dead body 2
இலங்கை

அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற இளம் பிக்கு மரணம்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில்...

Namal
இலங்கை

நாமலின் ரகசிய பயணம் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீரென இந்தியாவுக்கு இரகசிய பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிய, கடந்த...

body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...