Rajapaksa 759
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேரணி: மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு உறுதி!

Share

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் தான் கலந்துகொள்ளவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆசி பெறுவதற்காகச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த எதிர்ப்புப் பேரணியில் நேரடியாகப் பங்கேற்பது, தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தும் முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...