Rajapaksa 759
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ பேரணி: மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு உறுதி!

Share

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் தான் கலந்துகொள்ளவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆசி பெறுவதற்காகச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) கண்டி தலதா மாளிகைக்குச் சென்றிருந்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த எதிர்ப்புப் பேரணியில் நேரடியாகப் பங்கேற்பது, தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தும் முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...