21 6134e432873c6
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை சர்ச்சை: முதுகெழும்பில்லாத அரசாங்கம்! – கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசம்!

Share

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் இன்று (நவம்பர் 18) திருகோணமலைக்கு விஜயம் செய்து, ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கத்தின் மீது விமர்சனம்: தற்போதைய அரசாங்கத்தை “முதுகெழும்பில்லாத அரசாங்கம்” என அவர் விமர்சித்துள்ளார்.

காசியப்ப தேரர் மீதான தாக்குதலின் காணொளியைக் கண்டு தாம் ஆவேசமடைந்ததேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் பௌத்த சமயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தினால் இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான குறித்த விகாரைக்கான வரலாறு சுனாமிக்கு (2004) முதலே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...