21 6134e432873c6
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை சர்ச்சை: முதுகெழும்பில்லாத அரசாங்கம்! – கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசம்!

Share

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் இன்று (நவம்பர் 18) திருகோணமலைக்கு விஜயம் செய்து, ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கத்தின் மீது விமர்சனம்: தற்போதைய அரசாங்கத்தை “முதுகெழும்பில்லாத அரசாங்கம்” என அவர் விமர்சித்துள்ளார்.

காசியப்ப தேரர் மீதான தாக்குதலின் காணொளியைக் கண்டு தாம் ஆவேசமடைந்ததேன் எனக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் பௌத்த சமயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தினால் இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான குறித்த விகாரைக்கான வரலாறு சுனாமிக்கு (2004) முதலே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...