images 20
இலங்கைஅரசியல்செய்திகள்

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது – அமைச்சர் ஆனேந்த விஜேபால பாராளுமன்றில் தகவல்!

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனேந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (நவ 18) நடைபெற்ற பாராளுமன்ற வரவு செலவு திட்ட குழு விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, ஆகஸ்ட் 30ஆம் திகதிக்குப் பிறகு, 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 கைத்துப்பாக்கிகள், 9 ரிவால்வர்கள், இரண்டு ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...