images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

Share

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை ஒன்று, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, உப குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி, அண்மையில் பாராளுமன்றத்தில் கையளித்தார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையிலான ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, ஓய்வூதியம் தொடர்பாக ஒரு முக்கியமான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

அரச சேவையில் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு, பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு, அவர்கள் முன்னர் வகித்த பதவிக்குரிய ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து முன்மொழியப்பட்டது.

அரச தொழிலை விட்டுவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் ஒருவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காத சூழ்நிலை உள்ளதால், இது குறித்துக் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...