MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

Share

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு முன்னணி நடிகை விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெஹல்பத்தர பத்மே, நாட்டில் பிரபல நடிகை ஒருவரிடமிருந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து, அதில் முக்கிய வேடத்தில் நடிக்குமாறு அழைப்பு வந்ததாகக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த நடிகையும் கெஹல்பத்தர பத்மேவும் துபாயில் ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பத்மே குறிப்பிட்டுள்ளார்.

பத்மே, தன்னைத் துபாயைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் என்று குறித்த நடிகைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அவரது போலி உருவப்படத்தால் ஏமாற்றப்பட்டு இந்த படத்திற்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...