image b0c60eadfa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்: ரூ. 170 மில்லியன் ஒதுக்கீடு – வடக்கு மாகாணத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாடு!

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium) ஒன்றை நிர்மாணிப்பதற்காக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக் தலைமையில் கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலச் சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வரும் வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலும் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து (Table Tennis), டென்னிஸ், பூப்பந்து (Badminton), வலைப்பந்து (Netball), சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கு, 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...