24 66f5b4f430c76
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அபே ஜனபல கட்சி ஆதரவு: சிந்தக வீரகோன் அறிவிப்பு!

Share

அபே ஜனபல கட்சி, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தக வீரகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

கட்சியின் உச்சபீடம், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமது கட்சியின் ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், ஜனாதிபதி நாட்டுக்கு முன்வைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் இந்தக் கட்சி எதிர்பார்ப்பதாக அந்த அறிவித்தல் கூறுகிறது.

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான தேசியப் பணிகளை அபே ஜனபல கட்சி உயர்வாகப் பாராட்டுகிறது.

சிங்களக் கலாச்சாரப் பாரம்பரியங்களைப் பாதுகாத்து, பௌத்தச் சூழலில் எப்போதும் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முயற்சிக்குத் தமது கட்சியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் அந்த அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...