23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

Share

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகம், குருணாகலில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தச் சேவையின் மூலம், வடமேல் மாகாண மக்கள் இனிமேல் தேசிய அடையாள அட்டைக்காக கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்குப் பயணிக்கத் தேவையில்லை. குருணாகல் மாகாண அலுவலகத்திலேயே சில மணி நேரங்களில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலி மற்றும் நுவரெலியாவில் ஏற்கனவே இந்தச் சேவை வெற்றிகரமாகச் செயற்படும் நிலையில், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைத் திட்டத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரச துறையில் விரைவான, நம்பகமான சேவைகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது மேலும் பலப்படுத்துகிறது எனவும், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் இதுபோன்ற அலுவலகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...