images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

Share

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான இந்த வவுச்சர்கள், 2025 ஆம் ஆண்டின் பாடசாலைத் தவணை முடிவதற்குள் பயனாளிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தயாரித்துள்ள நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ‘பரிசு அட்டைகள் கைப்பேசி செயலி’ மூலம் ஸ்கேன் செய்யக்கூடிய வகையில், QR குறியீட்டு இலக்கத்துடன் பாதுகாப்பாக அச்சிடப்பட்டு பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான யோசனையை பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகச் சமர்ப்பித்ததற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, பின்வரும் மாணவர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுகிறார்கள்:

நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 250 இற்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 644,000 மாணவர்கள்.

மாணவர்களின் எண்ணிக்கை 251 – 500 வரை உள்ள தோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 53,093 மாணவர்கள்.
விசேட தேவைகள் உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் 30 பாடசாலைகளைச் சேர்ந்த 2,300 மாணவர்கள்.

பிரிவெனாக்களில் தெரிவு செய்யப்பட்ட 30,000 மாணவர்கள். மொத்தமாகப் பெருமளவிலான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....