25 68cd8eedd5e90
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

Share

தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, ​​பாதாள உலகக் குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தர ஆகியோரின் தலைமையில், இலங்கையில் இருந்து சென்ற குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்தேக நபர்களை இலங்கைக்குக் கொண்டு வந்து விசாரித்ததில், நாட்டில் செயற்பட்டு வந்த பாரிய போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் கொலை குற்றங்கள் தொடர்பான பல முக்கியமான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மேலும், அண்மையில் பத்மே வழங்கிய தகவலின் அடிப்படையில், தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான இஷாரா செவ்வந்தியும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...