25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற நபருக்கு தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஷார செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்தில் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜே.கே.பாயை போலவே, சிலோன் பாயும் துபாயில் இருந்து மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகளில் மனித கடத்தல்காரர்களுடன் இந்த சந்தேகநபர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தங்குமிடம் வழங்கவும், வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல தேவையான வசதிகளை வழங்கவும் குறித்த கடத்தல்காரர்கள் ரூ. 2 மில்லியன் முதல் அதற்கு மேல் பணம் வசூலிப்பதாகவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிலோன் பாய் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....