images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில் போட்டியிட்டது), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காகத் தமக்கிடையே அமைத்துக் கொண்ட ‘கொள்கைக் கூட்டு’ச் செயற்பாடு தற்போது முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உட்பட சில உதிரித் தரப்புகளைச் சேர்த்துக்கொண்டு ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற பெயரில் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்த அணிக்கும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையேதான் தேர்தலுக்குப் பின்னர் இந்த ‘கொள்கைக் கூட்டு’ அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டு முடிவுக்கு வர முக்கிய காரணமாக, மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தும் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகின்றது.

இது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி-யும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்-உம் தெரிவித்த கருத்துக்கள், இந்த ‘கொள்கைக் கூட்டு’ பெரும்பாலும் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துகின்றன.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...