292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

Share

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், இலங்கை சமஷ்டி (Federal) ராஜ்ஜியமாகிவிடும். குறிப்பாக வடக்கு மாகாண சபை சுயாதீன சபையாக மாறும்; அவர்களின் தேவைக்கேற்ப சட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

இவ்வாறானதொரு நிலைமைக்கே தமிழீழ புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முயற்சித்தார். அதற்காக 30 வருடங்கள் போரிட்டார். போர் மூலம் அடைய முடியாமல் போனதை வேறு வழியில் அடைவதற்குரிய முயற்சியாகவே இது உள்ளது.

எனவே, 13-ஐ நடைமுறைப்படுத்தக் கோரும் யோசனை, சுயாதீன நாடான இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வெளியகப் பொறிமுறையில் உள்ள அச்சுறுத்தலை நாம் உணர வேண்டும். அது எமது படையினருக்கு ஆபத்தாக அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...