8 17
இலங்கைசெய்திகள்

யாழ். தக்சியை பார்த்து வியந்த செவ்வந்தி : வெளிவரும் பல தகவல்கள்!

Share

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த பெண்ணான நந்தகுமாரன் தக்சியை கண்டு வியப்பில் ஆழ்ந்ததாக கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிசாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை வானொலியின் இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

செவ்வந்தி நேபாளத்திற்கு செல்லும் வரை தக்சியை தெரியாதாம். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நேபாளத்தில் பிரிந்து வசித்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் அவர்களின் இருப்பிடங்களை தெரிவித்துக் கொள்ளவில்லை.

ஆறு அல்லது ஏழு நாட்கள்  தொடருந்துகள், பேருந்துகள் மற்றும் கார்களில் செவ்வந்தியை அழைத்துச் சென்ற ஒரு இந்திய தரகரால் ஜூன் மாதம் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நேபாள எல்லையில் தரகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்படும் வரை இஷாரா செவ்வந்தி நேபாளத்திலேயே இருந்துள்ளார்.

அங்கு தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், பணம் உட்பட அனைத்தும் துபாயில் இருந்த ஜே.கே.பாயால் வழங்கப்பட்டுள்ளன.

அவரது நலனை விசாரிக்க அவர் அவ்வப்போது துபாயிலிருந்து நேபாளத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜே.கே. பாயின் வேண்டுகோளின் பேரில் கே. சிவதாசன் செவ்வந்தி ஒரு மீன்பிடி படகில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நேபாளத்தில் தங்கியிருந்த காலத்தில் செவ்வந்தி தனது உடல் அழகு மற்றும் முகத்தை பொலிவாக வைத்திருக்க அழகுக்கலை நிலையங்களுக்கு அதிகம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...