7 17
இலங்கைசெய்திகள்

ஒரே மாதத்தில் தோற்றத்தை மாற்றிய செவ்வந்தி.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாதாள உலக பின்னணி!

Share

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ஒரு மாதத்திற்குள் இஷாரா செவ்வந்தி தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட பின்னர், பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மதுகம சென்றுள்ளார்.

அங்கு மதுகமையை சேர்ந்தவரும் தற்போது வெளிநாட்டில் வசித்து வருபவருமான பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவர் ஒரு மாத காலம் வரை செவ்வந்தி தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

தனது பாதாள கும்பல் உறுப்பினர்களை பயன்படுத்தி அவர் இந்த உதவிகளை செவ்வந்திக்கு வழங்கியுள்ளார்.

குறித்த பாதாள உலகத் தலைவர், கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு மாத காலம் வரை மதுகமவில் தங்கிய செவ்வந்தி, தனது நீண்ட தலைமுடியை குறுகியதாக வெட்டி தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.

இதன்போது, மதுகம பகுதியில் உள்ள பல இரகசிய இடங்களில் ஒளிந்து கொள்ள தேவையான வசதிகள் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இஷாரா செவ்வந்தி, மதுகமவில் பதுங்கியிருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அங்கு தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அப்போது செவ்வந்தி மாத்தறைக்கு தப்பிச் சென்றிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

மாத்தறையில் சில நாட்களை கழித்த பின்னர், அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து நேபாளுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறிருக்க, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களும் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தடுப்புக் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி, ஜே.கே பாய், சுரேஷ் மற்றும் தக்சி ஆகியோரை கொழும்பு குற்றப்பிரிவு விசாரித்து வருகின்றது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...