11 13
உலகம்செய்திகள்

காசாவில் நிரந்தர அமைதி.. ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

Share

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இரு திசைகளிலும் ரஃபா கடவைத் திறப்பதும் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என கலீல் அல்-ஹய்யா குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தின் வளர்ச்சியில் முக்கிய தருணங்களில், ட்ரம்பின் தனிப்பட்ட தொடர்பு – ஒரு வலுவான கையாகவும், மென்மையான வழிகாட்டியாகவும் – முக்கிய பங்கு வகித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தின் முதல் கட்டம், போரை நிறுத்தி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஹமாஸின் மூத்த தலைவரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...