4 13
உலகம்செய்திகள்

சீன நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : பல மைல்களுக்கு சிக்கித் தவித்த கார்கள்

Share

சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சுங்கச்சாவடியில், 8 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு, அக்டோபர் 6 ஆம் திகதி மில்லியன் கணக்கான பயணிகள் வீடு திரும்பியதால், அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்பொது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

36 பாதைகளைக் கொண்ட வுசுவாங் சுங்கச்சாவடி, சுங்கச்சாவடிகளைக் கடக்க முயற்சிக்கும் போது, ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான கார்கள் வரிசையில் நிற்பதை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இதேபோன்ற பெரிய போக்குவரத்து நெரிசல்கள் இதற்கு முன்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...