6 10
இலங்கைசெய்திகள்

இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Share

உலகம் முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர் எனவும் இது ஒரு புதிய நிக்கோடின் அடிமைத்தனத்தைத் தூண்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, சிறுவர்கள் பெரியவர்களை விட சராசரியாக ஒன்பது மடங்கு அதிகமாக ‘வேப்பிங்’ (Vaping) எனப்படும் இ-சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

புகையிலைத் துறை ” இளம் வயதினரை இலக்கு” வைத்து இ-சிகரெட்டுகளை சந்தைப்படுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ‘தீங்குகளைக் குறைக்கும்’ (harm reduction) பொருளாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இது சிறு வயதிலேயே சிறுவர்களை நிக்கோடினுக்கு அடிமையாக்குகிறது என்று வைத்தியர் எட்டியன் க்ரூக் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இ-சிகரெட் பயன்படுத்தும் பெரியவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆகும். 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 1.5 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினர் ‘வேப்பிங்’ பயன்படுத்துகின்றனர்.

உலகளவில் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 138 கோடியாக இருந்தது, இது 2024இல் 120 கோடியாகக் குறைந்துள்ளது. பெண்களிடையே இதன் பயன்பாடு 2010இல் 11%இல் இருந்து 2024இல் 6.6%ஆகக் குறைந்துள்ளது.

ஆண்களிடையே 2010இல் 41.4%இல் இருந்து 32.5% ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், உலகளவில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் இன்னும் புகையிலையைப் பயன்படுத்துகிறார்.

இ-சிகரெட்டுகளைக் கட்டுப்படுத்த நாடுகள் முயற்சித்தாலும், 2024ஆம் ஆண்டின் இறுதி வரையில், 62 நாடுகளில் இ-சிகரெட் கொள்கைகள் இல்லை, மேலும் 74 நாடுகளில் இ-சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக, நாளை (மே 11) அளவில்...