11 7
இலங்கைசெய்திகள்

லசந்தவை கொல்ல குழு அனுப்பியவர் சரத் பொன்சேகாவா.. வெளியான அதிர்ச்சி தகவல்

Share

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அன்றிருந்த எதிர்க்கட்சி கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்ததாகவே அவர் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச இணையதளம் ஒன்றிலும் வெளியிடப்பட்டிருந்ததையும் அவர் தெளிவுபடுத்தினார்.

தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக சரத் பொன்சேகா, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாகவும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் பேசுகிறார். அது தொடர்பில் நாம் அதிகமாக கதைக்க விம்பவில்லை. சரியான சந்தர்ப்பத்தில் விபரங்களை தெரிவிக்கிறேன் என்றார் மனோஜ் கமகே.

ஜோசப் மைக்கல் பெரேரா மட்டுமல்ல ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால் தனது பக்கம் குற்றம் இருப்பதால் அதை மறைப்பதற்காக ராஜபக்சவுக்கு எதிராக பேசுவதாக ஒரு சந்தேகம் எழுகிறது என மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...