2 7
இலங்கைசெய்திகள்

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது

Share

தற்போதைய தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காது என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவை அமர்வுகள் தொடர்பில் தாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்பது மக்களுக்கும் தெரியும் எனவும் அவர்கள் மீது அதிக கரிசனை கொண்டவர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னேற்றுவது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது என்பனவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காாணமல் போனவர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இந்த அரசாங்கம் தீர்வுகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பாக ஜனநாயக ரீதியாக பேசுவதற்கும் அவற்றை அகழ்வவதற்கும் இந்த அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சனைகளை உண்மையாக பேசுவது எமது அரசாங்கமே எமது அரசாங்கத்தில் வாய் பேச்சு வீரர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சனைகளை இதயங்களின் இருப்பாகக் கொண்டு தீர்வு வழங்க அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...