7 5
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் மெய்பாதுகாவலர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மெய்பாதுகாவலர் நெவில் வன்னியாராச்சி, பாதுகாப்புப் படைகளில் மோசடியாக பதவிகளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யோஷித ராஜபக்சவுக்கு சட்டவிரோதமாக கடற்படையில் உயர் பதவிகள் வழங்கப்பட்டதைப் போலவே நெவில் வன்னியாராச்சிக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பாதுகாப்புப் படைகளில் சிலருக்கு இந்த முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம் புலனாய்வு பத்திரிகையாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மகிந்த ராஜபகசவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானத்தை விட அதிக வருமானம் மற்றும் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமை இருப்பது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் அறிக்கை சமர்பித்த நிலையிலேயே அவருக்கு மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 36
விளையாட்டுசெய்திகள்

தடையின்மைச் சான்றிதழ் கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக நுவான் துஷார வழக்கு!

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை...

Untitled 35
செய்திகள்உலகம்

“ஹோர்முஸ் நீரிணையை நீங்களே கைப்பற்றுங்கள்”: நட்பு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அதிரடி அழைப்பு!

ஈரானுடனான போர் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எரிபொருள்...

Untitled 34
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத்...

Untitled 33
செய்திகள்உலகம்

எண்ணெய் சந்தையில் கடும் அதிர்ச்சி: ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 106 டொலராக உயர்வு!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...