11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

Share

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிப்படுத்தும் ஆர்வம் சந்தேகத்திற்கிடமானது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச பீதியடையவோ அல்லது அவசரப்பட்டு முடிவுக்கு வரவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கம் அனைத்து குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதால், நாமல் ராஜபக்சவோ அல்லது வேறு எவரோ பீதியடையத் தேவையில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் மரணம் குறித்து பல ஆண்டுகளாக கடுமையான சந்தேகங்கள் உள்ளன. இந்த மரணத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளன.

தற்போது அது தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதானவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...

9 4
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் வாங்குவதற்கு லங்கா...