13 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழுக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அநுர அரசு

Share

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் வெளிநாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலக குழுவினர் இந்த அதிகாரி தங்களை கைது செய்ய வந்துள்ளதாக அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் மறைந்திருந்த கெஹல்பத்தர பத்மே உட்பட 05 பாதாள உலக குழுவினர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலக குழுவினர் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், பத்மே தலைமையிலான பாதாள உலக குழுவினர் கைது செய்யப்பட்டதன் மூலம், தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரை சுட்டுக் கொல்லும் சூழ்நிலை குறைவடைந்துள்ளது.

தப்பி ஓடும் பாதாள உலக குழுவினரை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடுவோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதாள உலகக் குண்டர்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் இன்டர்போல் மூலம் அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையில் ஈடுபட்ட மூன்று பாதாள உலகக் குற்றவாளிகள் பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்திருந்த போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று பாதாள உலக குழுவினரும் பெங்களூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8 மாதங்களாக பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இரத்மலானையை சேர்ந்த ஐரேஷ் அசங்க, தேவுந்தர திலீப் ஹர்ஷன மற்றும் கோட்டஹேனே சுகத் ஆகிய 3 பாதாள உலகக் கும்பலை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று குற்றவாளிகளையும் எதிர்வரும் நாட்களில் இந்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய மத்திய குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...