9 1
இலங்கைசெய்திகள்

உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி: சஜித் குற்றச்சாட்டு

Share

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பொலன்னறுவை – மின்னேரியவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சஜித் பிரேமதாச மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டஅவர், இந்த அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை.

அதே போன்று உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி காரணமாக விவசாயிகளுக்கு எதுவித பிரதிபலனும் கிடைப்பதில்லை.

அவற்றுக்கு வரி விதிக்கமுன்னரே உருளைக்கிழங்கும், பெரிய வெங்காயமும் பெரும் தொகையாக இறக்குமதி செய்யப்படடு களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டது.

விவசாயிகளின் பிரச்சினை மற்றும் யானை – மனித மோதல்களைத் தீர்ப்பதற்கான என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...