12
இந்தியாசெய்திகள்

விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்

Share

கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில் வேண்டுமென்றே சென்றதாக தமிழ்நாட்டு பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பேரணிக்கு கூட்டத்தை அதிகரிப்பதற்காக விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு பொலிஸாரின் இத்தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது.

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை விஜயின் கரூர் பேரணியில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸார் தரப்பில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது எனவும் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை முன் வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து, விஜய் பரப்புரைக்கு தானாக வந்த கூட்டம் அது. நாங்கள் வாகனம் வைத்து அழைத்து வரவில்லை. 1.20 இலட்சம் சதுர அடி கொண்ட பகுதியில் பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. அங்கு 60,000 பேர் கூடியிருக்க முடியும் என தவெக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தவெக கேட்ட பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. விஜய் பிரசாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரசாரம் நடந்தது. இதனால், அந்த இடத்தை விஜய் பிரசாரத்துக்கு வழங்கினோம் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நீதிபதியின் கேள்விக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை எனவும் விஜயின் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என பொலிஸாரிடம் கூறியதாக தவெக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கேள்வி எழுப்பிய நீதிபதி, உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டொப் ஸ்டார். வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று கணித்தீர்கள் என வினவியுள்ளார்.

தொடர்ந்து, பொலிஸார் தரப்பில் கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை. பொலிஸார் கூறியதை மீறி தவறான வழியில் சென்றார்கள். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தனர்.

முனியப்பன் கோயில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். கேரவனுக்குள் செல்லாமல் விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு காரணம். கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம்.

இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார். 2 நோயாளர் காவு வண்டிகள் வந்த போதும் விஜய் பேசிக்கொண்டிருந்தார் என பொலிஸார் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்னும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...