10
இந்தியாசெய்திகள்

கரூரில் இரவோடு இரவாக நிகழ்ந்த மர்மங்கள்.. நடந்தது என்ன..!

Share

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இவ்விடயம் தமிழக அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்தவர்களுக்கு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்ற போதும் அவசர அவசரமாக ஏன் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

எனவே, இது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து இதற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலாளர் கூறுகையில், “கரூர் மருத்துவமனையில் மொத்தம் சில மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளனர். மேலும், அன்றைய தினம் தான் சேலத்தில் பொதுச் சுகாதார மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் நிறைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நானும் அதில் பங்கேற்றிருந்தேன். இந்தச் செய்தி வந்ததும் அந்த மருத்துவர்களை கரூர் அனுப்பி விட்டோம்.

பொதுவாகவே பிரேத பரிசோதனை தொடர்பான வழக்குகளில் சீக்கிரம் செய்து கொடுக்க கூறியே அறிவுறுத்தல் வரும். இதுபோன்ற பெரிய சம்பவங்களில் தீவிரத்தன்மை அதிகமாகவே இருக்கும்.

காலை 6 முதல் மாலை 6 வரை தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலெக்டர் அனுமதியுடன் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என விதி இருக்கிறது.

குறித்த பிணவறையில் அதிகபட்சம் 28 உடல்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே சில உடல்கள் இருந்தன. அன்றைய தினம் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வந்தனர்.

மேலும், ஒரு உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் குறிப்பிட்ட காலம் ஆகும். இதுபோன்ற சூழல்களில் தாமதம் ஆக ஆக மக்களிடையே பதற்றம் அதிகமாகும்.

இரவு 2 மணிக்குப் பிரேதப் பரிசோதனை தொடங்கப்பட்டாலும் கூட 40 பேரின் உடல்களையும் பிரேதச் சோதனை செய்ய மறுநாள் மாலை 4 ஆகிவிட்டது. காலை 6 மணிக்குப் பிரேதப் பரிசோதனை தொடங்கியிருந்தால் மறுநாள் வரை நீடித்து இருக்கும்.

அதன்போது மக்களிடையே வேதனையும் கோபமும் அதிகமாகவே இருக்கும். ஏற்கனவே உறவுகளை இழந்த மக்கள், உடல்கள் கிடைக்காமல் வேதனை அடைவார்கள்” என விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...