17
இந்தியாசெய்திகள்

கரூர் சம்பவம்: ஹேம மாலினி தலைமையில் ப.ஜ.க விசாரணைக்குழு அமைப்பு

Share

கரூர் சம்பவம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி, ஹேம மாலினி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜே.பி. நட்டா, சம்பவத்தை ஆய்வு செய்ய 8 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜ் லால், சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாஜக எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் புட்டா மகேஷ்குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...